அகிம்சை வழியில் அமைதியாய் சென்றோம்
வீர விளக்கில் சுடராய் நின்றோம்
அடிமை விலங்கினை அறிவால் வென்றோம்
அந்நியனை வெளியேற்றி நாட்டை கைப்பற்றி
ஒற்றுமை பட வந்தோம்
உணர்ச்சிகள் பொங்கி உண்மையைக் கண்டும்
உணர்வை இழந்து உறங்கி விட்டோம்
மதவெறி என்னும் மயக்கத்தில்
எத்தனை எத்தனை பிரிவுகள்
இயற்கை வாழ்வதோ மனிதனுக்காக
மனிதன் வீழ்வது யாருக்காக
யுத்தத்தில் வீழ்ந்தோம்
இரத்தத்தில் மிதந்தோம்
இருந்தும் மனம் மறக்கவில்லை மதவெறியை
நீ எப்போது மூடுவாய் உன் திரையை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக