ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

மதவெறி





அகிம்சை வழியில் அமைதியாய் சென்றோம்
வீர விளக்கில் சுடராய் நின்றோம்
அடிமை விலங்கினை அறிவால் வென்றோம்
அந்நியனை வெளியேற்றி நாட்டை கைப்பற்றி
ஒற்றுமை பட வந்தோம்
உணர்ச்சிகள் பொங்கி உண்மையைக் கண்டும்
உணர்வை இழந்து உறங்கி விட்டோம்
மதவெறி என்னும் மயக்கத்தில்
மதம் பிடித்து நின்றதனால்
எத்தனை எத்தனை பிரிவுகள்
இயற்கை வாழ்வதோ மனிதனுக்காக
மனிதன் வீழ்வது யாருக்காக
யுத்தத்தில் வீழ்ந்தோம்
இரத்தத்தில் மிதந்தோம்
இருந்தும் மனம் மறக்கவில்லை மதவெறியை
நீ எப்போது மூடுவாய் உன் திரையை ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக