தமிழக அரசியலில் புதியதோர் உதயம்
அன்று முதல் நீதான் மக்களின் இதயம்
துணிந்தே செய்தாய் தூக்கமின்றி எதையும்
மக்களிடம் வளந்த்து உன்னுடைய விதையும்
மாணிக்கப் பிறப்பாய் மண்ணிலே வந்தாய்
சீரிய சிந்தனை சித்தத்தில் கொண்டாய்
உண்மையில் என்றும் ஊறியே நின்றாய்
அன்பை அனைத்தும் அருளால் வென்றாய்
சூரியனாய் பொய்யை சுட்டெரித்தாய்
புறப்பேச்சை தள்ளியே விட்டொழித்தாய்
சூழ்ச்சி முடிச்சுகள் கட்டவிழ்த்தாய்
அறிவுக்கூர்மையால் வென்றெடுத்தாய்
எளிமையை ஏணிப்படியாய்க் கொண்டு
அரசியல் பணியில் நீ செய்த தொண்டு
மக்களின் மனதில் நிச்சயம் உண்டு
என்றும் வாழும் உன் புகழ் நின்று …